Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல்: சுகாதாரத்துறை செயலர் விளக்கம்
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
முதல்வர் ஸ்டாலின் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையை ஆய்வு செய்தபிறகு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது உண்மையல்ல என்றும் இரண்டாம் அலை மற்றும் முதல் அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.