/* */

கொரோனாவை கட்டுப்படுத்த ஒப்பந்த டாக்டர்கள் நியமனம்- சென்னை மாநகராட்சி அழைப்பு

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்காக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, மருத்துவ மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

HIGHLIGHTS

கொரோனாவை கட்டுப்படுத்த ஒப்பந்த டாக்டர்கள் நியமனம்- சென்னை மாநகராட்சி அழைப்பு
X

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

அவ்வகையில், சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட ஏதுவாக, மருத்துவம் பயிலும் மாணவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, பயிற்சி மருத்துவர் பணிக்கு ரூ.40,000 மாத சம்பளத்தில் 3 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தற்காலிக அடிப்படையில் 300 பயிற்சி மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 12 May 2021 4:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!