/* */

சென்னை: மருத்துவமனைகளுக்கு இன்றுமுதல் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்

சென்னையில் இன்று மதல் ஆன்லைன் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

சென்னை: மருத்துவமனைகளுக்கு இன்றுமுதல் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்
X

ரெம்டெசிவிர் மருந்து

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் தொற்று தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவீர் மருந்து சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி சில தினங்களுக்கு முன் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி, ரெம்டெசிவிர் மருந்துக்காக முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று (மே 21) சென்னை, அண்ணாநகரில் உள்ள மருந்துக் கிடங்கு மூலம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்களுக்கு, உரிய ஆவணங்களின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 21 May 2021 12:40 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...