Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள்..! ஆணையர்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் சென்னை தி.நகர் ராமேஸ்வரம் தெருவில் உள்ள காய்ச்சல் சிறப்பு முகாமினை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "நோய் குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் 12 ஆயிரம் தன்னார்வலர்கள், தலைவலி, காய்ச்சல், நுகர்வு தன்மை இல்லாதது குறித்து வீடு வீடாக ஆய்வு செய்து வருவதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.