/* */

செங்கல்பட்டில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ 13.8 லட்சம் காக்கும் கரங்கள் காவலர்கள் வழங்கல்

செங்கல்பட்டில் பணியின் போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு, காக்கும் கரங்கள் காவலர்கள் சார்பில் ரூ 13 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ 13.8 லட்சம் காக்கும் கரங்கள் காவலர்கள் வழங்கல்
X

செங்கல்பட்டில் பணியின் போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு காக்கும் கரங்கள் காவலர்கள் ரூ 13 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண நிதி உதவி வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தவர் தலைமை காவலர் தனிகைவேல். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18 -ம் தேதி, பணியில் இருக்கும்போது பணி நிமித்தமாக வெளியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அவருடன் பயிற்சி பெற்ற காவலர்கள், 2592 காவலர்கள் சார்பில் நிதி திரட்டி ரூ, 13.80 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.

காக்கும் கரங்கள் காவலர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அவரிடம் பணியாற்றிய சக காவலர்கள் பேசியபோது, தலைமை காவலர் தனிகைவேல், கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாவது பேட்ஜ் காவல் பணியில் சோர்ந்து துடிப்புடன் பணியாற்றி, பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயலாற்றி பல்வேறு பாராட்டுகளை பெற்றவர்.

காவலர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.13 லட்சத்து 80 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை பணியில் இருந்தபோது வீர மரணம் அடைந்த 16 காவலர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 18 July 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?