/* */

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டார்.

HIGHLIGHTS

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோயிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது, இதில் கலந்துகொள்ள சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை கோயில் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதால் அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதன் விளைவாக இன்று அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

இதில் கலந்துகொண்ட இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆலயத்தை ஆய்வு செய்து பின்னர் நரிக்குறவர்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். பின்னர் அனைவருக்கும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Oct 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்