/* */

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை
X

திருடு நடந்த வீடு. 

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பேராசிரியர் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி. இவர் இன்று பிற்பகலில் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் புதியதாக வாங்கி வைத்திருந்த 12,சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது, உடனே இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் பீர்கண்காரனை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருங்களத்தூர் பகுதியில் சமீப நாட்களாக தொடர்ந்து பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையர்களின் கைவரிசை காட்டி வருவதனால் பொது மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது, இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  2. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  6. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  7. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  9. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  10. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்