/* */

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?

பள்ளிகரணையில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?
X

பள்ளிக்கரணை தெருக்களில் தேங்கியுள்ள மழைநீர்.

சென்னை பள்ளிகரணை, கோவலன் நகர், 6வது குறுக்குத் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. பின்னர் மழை விட்ட உடன் தேங்கிய நீர் அகற்றப்பட்டது.
ஆனால், பள்ளிகரணை கோவலன் நகரில் மட்டும், தற்போது வரை ஒரு மாத காலமாக மழை நீர் அகற்றப்படாமல் அப்படியே இருந்து. தற்போது கருப்பு நிறத்தில் சாக்கடையாகவே சாலையில் தேங்கி நிற்கிறது. அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட இந்த கழிவுநீரிலே செல்லக்கூடிய நிலைதான் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
பெருங்குடி மண்டல மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாக்கடை அடைப்பை சரிசெய்து, தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, நோய்த்தொற்று பரவாமல் இருக்க, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பலமுறை மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Updated On: 16 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!