/* */

பல்லாவரம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை

பல்லாவரம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பல்லாவரம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை
X

சென்னை பல்லாவரத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ. என்ற தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 Jan 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  3. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  4. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  5. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  6. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  7. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  8. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  9. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  10. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?