/* */

ஆலப்பாக்கத்தில் 2வது வார்டு மறுவாக்குப்பதிவு : நடுவிரலில் அழியா மை வைப்பு

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கத்தில் 2,வது வார்டு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் நடுவிரலில் அழியா மை வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆலப்பாக்கத்தில் 2வது வார்டு மறுவாக்குப்பதிவு : நடுவிரலில் அழியா மை வைப்பு
X

ஆலம்பாக்கம் 2 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் நடு விரலில் மை வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த 9 தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சிற்றூராட்சி 1 வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-வது வார்டு உறுப்பினருக்கு தேர்தல் நடைபெற்றது.

1-வது வார்டு வாக்காளர்களுக்கும் 2 வது வார்டு உறுப்பினர் வாக்குச்சீட்டுகளை வழங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது.இதனை அறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராகுல்நாத் உத்தரவுப்படி தேர்தல் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 2,வது சிற்றூராட்சி வார்டுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வார்டில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.

92 வாக்குகள் உள்ளன. மறுவாக்குப்பதிவு நடைபெறுவதால் நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

Updated On: 11 Oct 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  8. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...