பராமரிப்பு பணி காரணமாக செப். 8 அன்று கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து
தாம்பரம் மூன்றாவது அகல இரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக நாளை (08.09.2021) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
தாம்பரம் மூன்றாவது அகல இரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக நாளை (08.09.2021) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில்,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மூன்றாவது அகல இருப்புப்பாதை பராமரிப்பு காரணமாக செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும், காலை9.40, மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.
திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இந்த அனைத்து ரயிள்களும் நாளை பிற்பகல் 1.30 மணியிலிருந்து வழக்கம்போல் செயல்படும்.
மேலும் நாளை காலை, காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், செங்கல்பட்டு இரயில் நிலையம் வரை வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிற்பகல் 2.40 மணிக்கு, மீண்டும் வைகை எக்ஸ்பிரஸ்- ஆக, மாற்றம் செய்து, மதுரைக்கு இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.