/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பதிவாகிய மழை நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 187.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பதிவாகிய மழை நிலவரம்
X

பைல் படம்.

செங்கல்பட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் 187.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று மாலை 4 மணியிலிருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

மாலை 4 மணி முதல் மாலை 8 மணி வரை மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்:

செங்கல்பட்டு- 65, மி.மீ, திருப்போரூர்-13, மி.மீ, திருக்கழுக்குன்றம்-46 மி.மீ, மாமல்லபுரம்-5.2. மி.மீ, மதுராந்தகம்-20 மி.மீ, செய்யூர்-14, மி.மீ, தாம்பரம்- மழை பெய்யவில்லை, கேளம்பாக்கம்- 24.4 மி.மீ, மழை என மாவட்டத்தில் மொத்தம் 187.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது

Updated On: 13 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை