ஆக்ஸிஜன் தட்டுப்பாடு: செங்கல்பட்டில் 11 பேர் உயிரிழப்பு..!
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் உயிரிழப்பு: பரபரப்பு நிலவுவதால் போலீஸ் குவிப்பு.
HIGHLIGHTS
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் பலியாகியுள்ளனர், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் பலியாகியுள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 5 மணி நேரத்துக்கு மேலாக ஆக்சிஜன் தட்டுப்பாடு என நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகள் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் பரபரப்பு நிலவுகிறது.