மறைமலைநகரில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா
மறைமலைநகரில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்பார்வையாளர் பொறியாளர் ஆர். மணிமாறன் தலைமையில், மறைமலைநகர் செயற்பொறியாளர் ஆர். மனோகரன் முன்னிலையில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு மின் சிக்கனம் குறித்து உரையாற்றினார்.
டிசம்பர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை வருடாந்தோறும் பொதுமக்களுக்கு மின்சாரம் சிக்கனம் குறித்து மின் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் அந்த வகையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மின் வாரிய அதிகாரிகள், ஊழியகள் மனித சங்கிலியாக சாலையோரத்தில் நின்று மின்சாரம் சேமிப்பு குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
பின்னர் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மின்சார சிக்கனம் மற்றும் பாதுபாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்