செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய எஸ்பியாக விஜயகுமார் பதவியேற்பு!
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய எஸ்பியாக விஜயகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக இருந்த சுந்தரவதனம், கடந்த 80 நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன், தமிழக அரசு சென்னை மாதவரம் துணை கமிஷனராக அவரை நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அப்பணியிடம் காலியானது.
இதைதொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய எஸ்பியாக, விஜயகுமார் நியமிக்கப்பட்டார். அதன்படி இன்று விஜயகுமார் புதிய எஸ்பியாக பொறுப்பேற்று கொண்டார்.
இதற்கு முன்னர், அவர் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வந்தார். செங்கல்பட்டு மாவட்டம் உதயமான ஒன்றரை ஆண்டுகளில் கண்ணன், சுந்தரவதனம், விஜயகுமார், என மூன்று எஸ்.பிக்கள் பணியமர்த்தப்படுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#Chengalpattu #district #newPoliceSP #Vijayakumar #sworn
#செங்கல்பட்டு #மாவட்டத்தின் #புதிய #எஸ்பியாக #விஜயகுமார் #பதவியேற்பு #policeSP #new #tamilnadu #instanews