/* */

செங்கல்பட்டு பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா

செங்கல்பட்டு பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா
X

செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளியில் உள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச பால்குட விழா இன்று நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளி மலை மீது பழைமை வாய்ந்த பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு பால்குட விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று காலை பால்குட விழா நடந்தது.பாலாற்றின் கரையோரமாக யாக சாலைகள் அமைத்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய பால்குட ஊர்வலத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடங்களை சுமந்து காவடியாட்டம் ஆடியும், தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது உள்ள பாலமுருகன் கோவிலை வந்தடைந்தனர்.

அதன் பின் 12.30 மணி அளவில் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அபிஷேக பாலும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் நிர்வாகி குமார், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சல்குரு, கோவில் விழாக்குழுவினர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Updated On: 28 Jan 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....