/* */

ஆண்டிமடம் அருகே சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக ஆண்டிமடம் அருகே சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆண்டிமடம் அருகே சாலை துண்டிக்கப்பட்டதால்  போக்குவரத்து பாதிப்பு
X

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே திருக்களப்பூரில்  துண்டிக்கப்பட்ட சாலையை பார்வையிட்டு எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆண்டிமடம் அடுத்த திருக்களப்பூர் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடையின் முழு கொள்ளளவை தாண்டி மழைநீர் அதிகமாக சென்றதால் திருகளப்பூர் - இறவாங்குடி சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலம் தண்ணீரில் மூழ்கியது. இதன்காரணமாக சிறுபாலத்தின் பக்கவாட்டில் மண்அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், சிவாஜி, வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட பலரும் உடனிருந்தனர்.

Updated On: 9 Nov 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...