/* */

விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பா.ம.க.புகார்

பா.ம.க. மீது வீண் பழி சுமத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ம.க. புகார் அளித்தது.

HIGHLIGHTS

விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பா.ம.க.புகார்
X

வி.சி.க. நிர்வாகிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


அரியலூர் மாவட்டம் கழுவன்தோண்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி அக்கட்சியினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர். இதை மர்ம நபர்கள் சிலர் அழித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பா.ம.க. தான் காரணம் என கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொல். திருமாவளவன் பிறந்த நாளையொட்டி எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை அளித்த பா.மக..வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் பா.ம.க. மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வீண்பழி சுமத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க. நிர்வாகிகள் மீது பொய்யான விமர்சனங்களை எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குமார், வானதிராயன்பட்டினம் முத்துகிருஷ்ணன், தா.பளூர் தங்கராசு, தழுதலைமேடு பூராசாமி ஆகியோர் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

சமூக நீதியை நிலைநாட்ட, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ரவிசங்கர் தலைமையில் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பா.ம.க.வினர் புகார் அளித்தனர்.

Updated On: 29 Jun 2022 8:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!