உலக சுற்றுலா தினம்: போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு
சுற்றுலாத்துறைசார்பில் நடத்தப்பட்டபோட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
உலக சுற்றுலா தின விழா உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி மாணவ, மாணவிகளைக் கொண்டு சுற்றுலாத்துறை சார்பாக, உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டி மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்டது. இதில், வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். இதில், அரசு தொழிற் பயிற்சி நிறுவன முதல்வர் என்.நாகராஜன், உதவி சுற்றுலா அலுவலர் ரா.கார்த்திக் மற்றும் நிர்வாக அலுவலர், பயிற்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.