42197 பேருக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் பணி :அமைச்சர் துவக்கிவைத்தார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 42197 பேருக்கு விலையில்லா வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைத்தார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறும் 42,197 நபர்களுக்கு தீபாவளி பண்டிகயை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த நபர்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்டவைகளை நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையில், கிராமப்புறங்களில் வாழும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகள் பயன்பெறும் வகையிலும், மேலும் நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகளை அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறருது.
அதன் அடிப்படையில், அரியலூர் வட்டத்தில் 3912 பேருக்கு வேட்டிகளும், 9292 பேருக்கு சேலைகளும், உடையார்பாளையம் வட்டத்தில் 5172 பேருக்கு வேட்டிகளும், 9966 பேருக்கு சேலைகளும், செந்துறை வட்டத்தில் 2588 நபர்களுக்கு வேட்டிகளும், 5444 நபர்களுக்கு சேலைகளும், ஆண்டிமடம் வட்டத்தில் 4035 நபர்களுக்கு வேட்டிகளும், 1788 நபர்களுக்கு சேலைகளும் என மொத்தம் 42,197 நபர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கும் பொருட்டு, இன்று மவாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 நபர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர் வட்டாட்சியர் (ச.பா.தி) விக்டோரியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.