Begin typing your search above and press return to search.
கடலூர் அருகே கிராமப்புறங்களில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
கோட்டைகாடு முனியப்பன்கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே கிராமப்புறங்களில் அங்காங்கே கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவலர்ளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், தீவிர வாகன சோதனை மற்றும் கிராமப்புறங்களில் முந்திரி காடு மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, கோட்டைகாடு முனியப்பன்கோவில் அருகே கஞ்சாவை பொட்டலம் கட்டப்பட்டு விற்பனை செய்து வந்தனர். அவர்களை விசாரணை செய்த போலீசார், கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பூமிநாதன் மற்றும் சிந்தனைசெல்வன் ஆகிய இரண்டு பேரையும் தளவாய் பாேலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.