Begin typing your search above and press return to search.
மாணவி தற்கொலை விவகாரம்: பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், நீதி வழங்கக்கோரி, அரியலூரில் இந்து முன்னணி, பாஜக, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் அண்ணா சிலை அருகே, மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவிக்கு நீதி வழங்கக்கேட்டு இந்து முன்னணி, பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அய்யம்பெருமாள் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், விஷ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவர் விஜயகுமார், பாஜக மாவட்டத் தலைவர் அய்யப்பன், இந்து முன்னணி திருச்சி கோட்ட செயலாளர் குணா, பாஜக மாநில துணைத்தலைவர் கவிதாசன், நகரத் தலைவர் வைரவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.