/* */

அழிந்து வரும் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

அழிந்து வரும் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
X

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அழிந்து வரும் நிலையில் உள்ள பல்வேறு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகம் உள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பு குழுத்தலைவர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறைத்தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை இயல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் சிவசுப்பிரமணியன் கூறும் போது தெற்காசியாவிலேயே அழியும் நிலையிலுள்ள கூழைக்கடா, பாம்புதாரா, அரிவாள்மூக்கன், வண்ணநாரை ஆகிய நான்கு பறவையினங்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் தற்போது காணப்பட்டு வருகிறது. லடாக் பகுதியில் அதிக அளவில் உள்ள வரித்தலைவாத்து இங்கு அதிகளவில் காணப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் கடந்த ஆண்டை விட தற்போது அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனக் கூறினார். தண்ணீரை முறையாக பராமரித்து சேமித்து வைத்திருந்தால் பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும் எனவும் கூறினார்.

Updated On: 18 Feb 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!