/* */

வெற்றியை தரும் புரட்டாசி மாத பௌர்ணமி

புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமியில் அம்பாளின் திருமுகம் பன்மடங்கு ஜொலித்து காணப்படும் என்று கூறப்படுகிறது.

HIGHLIGHTS

வெற்றியை தரும் புரட்டாசி மாத பௌர்ணமி
X

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்றாலும் இம்மாதத்தில் வரும் பௌர்ணமியில் அம்பிகை வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமியில் அம்பாளின் திருமுகம் பன்மடங்கு ஜொலித்து காணப்படும் என்று கூறப்படுகிறது. புரட்டாசி பௌர்ணமியில் அம்பாளை நினைத்து தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் தவம் மேற்கொள்வார்கள். அவர்களுடைய தவ வலிமை இந்நாளில் அதிகரிக்கும்.

புரட்டாசி பெளர்ணமி அன்று அந்த சந்திரனைப் போல அன்னையின் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தின் அமுதமாய் விளங்குவாள். அன்னைக்கு சந்திர மண்டல மத்யகா என்ற திருநாமமும் உண்டு.விரதமிருந்து வீட்டில் அல்லது சிவாலயங்களுக்கு சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வது நல்லது.

இந்த அற்புத நாளில் விரதம் இருந்து சிவ பெருமான் வழிபாடு செய்வதால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் கூட நீங்கும் என்பது சிறப்பு. அதோடு செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும்.

அதில், புரட்டாசி மாதம் தேவர்களின் இரவு காலத்தில் நடுநிசியாகும். அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தில் வரும் பெளர்ணமி அம்பிகையின் பிரகாசமாக தோன்றுவாள்.

இதன் காரணமாக புரட்டாசி மாத பவுர்ணமியில் பூஜைகள் செய்வது, தியானம் மேற்கொள்வது, மந்திரங்களை உச்சரிப்பது போன்ற செயல்களை செய்தால் நம் ஆத்ம சக்தி மேலும் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் அம்பாளுடைய பரிபூரண அருள் கிடைக்கும். நம் மனதை ஆட்கொண்டு நம்மை பாடாய்படுத்தும் தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு, இறைவனை அடையக் கூடிய அற்புத நாளாகவும் இந்நாள் இருக்கும் என்பதால் அனைவரும் தவறாமல் புரட்டாசி பவுர்ணமி நன்னாளில் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைந்து அவருக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து தியானம் இருந்தால் கூட போதும், அளப்பரிய நன்மைகளைப் பெறலாம்.

மேலும் புரட்டாசி பவுர்ணமியில் கிரிவலம் வருவது போன்ற விசேஷ வழிபாடு நடத்தப்படுவது உண்டு. இந்நாளில் சிவ வழிபாடு மேற்கொள்வது பூர்வ ஜென்ம பாவங்களை கூட நீக்கி நமக்கு இந்த ஜென்மத்தில் நல்வாழ்வு அருள செய்யும். இந்த அற்புதமான நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அவருக்கு நெய் விளக்கு ஏற்றி சிவ நாமத்தை உச்சரித்து வழிபட்டு வர வேண்டும். மேலும் இந்நாளில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்பதால் வில்வ இலைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பவுர்ணமி துவங்கியதும் கோவிலுக்கு சென்று வில்வ அர்ச்சனை செய்யுங்கள். சுத்தமான பசு நெய் கொண்டு அகல் விளக்கில் தீபம் போடுங்கள். இவ்வாறு செய்ய இறை அருள் கிடைத்து இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறி நன்மைகள் நடக்கும். சகஸ்ர நாம அர்ச்சனை செய்து குத்து விளக்கு தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்தால் வேண்டிய வரம் வேண்டிய படி கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாக, இப்பூஜையை செய்யலாம். மேலும் குழந்தை இல்லாத தம்பதிகள் மஹாலக்ஷ்மியை வேண்டி வரம் கேட்டால் உடனே குழந்தை பாக்கியம் உண்டாகும். இத்தகைய சிறப்புகள் மிகுந்த புரட்டாசி மாத பௌர்ணமி நன்னாளை இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தி அனைவரும் இறை அருள் பெறுவோம்!

Updated On: 20 Sep 2021 1:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்