/* */

ரூ.2000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி

மத்திய அரசால் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ரூ.2000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி
X
பைல் படம்

மத்திய அரசால் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும், அனைத்து வங்கி கிளைகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

மேலும், கணக்கு வைத்திருக்காத ஒருவர் கூட அடையாளச் சான்று இல்லாமல் எந்த வங்கிக் கிளையிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இருப்பினும், ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு வரம்பு உள்ளது. ஒரு நபர் ரூ.2000 நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.

இதனையடுத்து ரூ.2000 நோட்டுக்களை வாடிக்கையாளர்கள் வங்கி செலுத்தியும் மாற்றியும் வருகின்றனர். கடந்த செப்டம்பர் 2ம் தேதி, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93 சதவீத நோட்டுகள் பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 76 சதவீத வைப்புத் தொகையாகவும்,13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30ம்தேதியுடன் முடிவு அடைவதாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஆர்பிஐ உத்தரவிட்டது.

இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதுவரை புழக்கத்தில் இருந்த ரூ 3.42 லட்சம் கோடி நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

96 சதவீதம் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. ரூ.14 ஆயிரம் மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் இதுவரை வங்கிகளுக்கு வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது.

2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை வைத்திருந்தால் அதை வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவித்தது. தொடர்ந்து இந்த ரூ.2000 நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரைக்கு வங்கிகளில் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் 2000 ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது.

இந்த நிலையில் ஆர்பிஐ எதிர்பார்த்த அளவிற்கு 2000 ரூபாய் தாள்கள் வராத நிலையில் கால அவகாசத்தை மேலும் 7 நாட்களுக்கு உயர்த்தியது. அதன்படி அக்டோபர் 7ம்தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 Oct 2023 5:36 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...