/* */

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்பு

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்பு
X

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ஏ.வி.ரமணா 

சுப்ரீம் கோர்ட்டின் 47வது தலைமை நீதிபதியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் பதவியேற்ற எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்றார். புதிய தலைமை நீதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த என்.வி. ரமணா நியமிக்கப்பட்டார். அவர் இன்று 48வது நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆந்திராவை சேர்ந்த ரமணா ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்களில் பணியாற்றி உள்ளார். ஆந்திராவின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் இருந்தார்.

2013 மார்ச் 10 முதல் மே 20 வரை ஆந்திர உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். செப்., 2013ல் டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2014 பிப்ரவரி முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்து இன்று தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 26 வரை உள்ளது.

Updated On: 24 April 2021 10:33 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்