/* */

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி

அருணாசல பிரதேசத்தின் தொலைதூர சிற்றூா் ஒன்றில் உள்ள ஒரேயொரு வாக்காளரான 44 வயது பெண்மணிக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

HIGHLIGHTS

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
X

சோகேலா தாயாங் (நடுவில் நிற்பவர்)

மக்களவை 1-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்களுடன் குறைந்தபட்சம் 40 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று, தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்துச் சென்றனர். சீன எல்லையில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்து தயாங் மட்டும் பெண் வாக்காளர் ஆவார்.

அருணாசல பிரதேச மாநிலம் அஞ்சா மாவட்டத்தில் உள்ள மலோகம் என்ற சிற்றூரில் சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. சீன எல்லையையொட்டி உள்ள அந்தச் சிற்றூரில் சோகேலா தாயாங் (44) என்ற பெண்ணைத் தவிர, மற்ற அனைவரின் பெயா்கள் வேறு வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் வேறு வாக்குச்சாவடிக்கு மாற தாயாங் விரும்பவில்லை. எனவே மலோகம் வாக்குச்சாவடியில் ஒரேயொரு வாக்காளராக தாயாங் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில் வாக்களித்தார்.

அவா் ஒருவா் வாக்களிப்பதற்காக மிகவும் ஆபத்தான நிலப்பகுதி வழியாக சுமார் 40 கி.மீ. நடந்தே சென்று தோ்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடி அமைத்தனா் என்று மாவட்ட அதிகாரி ஒருவா் கூறினார்.

இதுதொடா்பாக தாயாங் கூறுகையில், ‘எனது வாக்குரிமையை பயன்படுத்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வாக்களிக்க வாய்ப்பளித்த தோ்தல் அதிகாரிகளுக்கு நன்றி’ என்றார்.

இதுகுறித்து அருணாசல பிரதேச தலைமை தோ்தல் அதிகாரி பவன் குமார் கூறுகையில், ‘தோ்தல் மூலம் ஒவ்வொரு வாக்காளரின் குரலும் கேட்கப்பட வேண்டும் என்பதே தோ்தல் ஆணையத்தின் நோக்கம். வாக்குப் பதிவில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்குவது, சமவாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்ற தோ்தல் ஆணையத்தின் அா்ப்பணிப்புக்கு சான்றாக தாயாங்கின் வாக்குப் பதிவு திகழ்கிறது’ என்றார்.

அருணாசல பிரதேசத்தில் உள்ள 2,226 வாக்குப் பதிவு மையங்களில், 228 வாக்குப் பதிவு மையங்களை நடந்து மட்டுமே சென்றடைய முடியும். இந்த 228 மையங்களில் 61 மையங்களைச் சென்றடைய 2 நாள்களும், 7 மையங்களைச் சென்றடைய 3 நாள்களும் ஆகும்.

Updated On: 20 April 2024 4:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது