/* */

அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்: 2 இந்தியர்கள் பலி

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இரு இந்தியர்கள் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்:  2 இந்தியர்கள் பலி
X

ட்ரோன் தாக்குதலில் எண்ணெய் எரிபொருள் டேங்கர்கள் எரிந்து கடும் புகை வெளியேறியது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில், திடீரென ட்ரோன் மூலம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், ஏடிஎன்ஓசி எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 எரிபொருள் டேங்கர் வெடித்து சிதறின.

இந்த கொடூர தாக்குதலில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என, இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 6 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஈரான் ஆதரவு பெற்ற, ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலை, உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன.

Updated On: 17 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?