Begin typing your search above and press return to search.
முயல் வேட்டை- 2 பேருக்கு 50 ஆயிரம் அபராதம்
விருதுநகர் அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகர் அருகே பாலவநத்தம் பகுதியில் அடிக்கடி முயல் வேட்டை நடப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வத்திராயிருப்பு வனச்சரகர் கோவிந்தன் தலைமையிலான வனத்துறையினர் பாலவநத்தம் பகுதியில் இரவு நேர ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மற்றும் பாண்டியராஜ் ஆகியோர் முயல் வேட்டையில் ஈடுபட்டு பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 3 முயல்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.