Begin typing your search above and press return to search.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து -ஒருவர் பலி
விருதுநகர் அருகே மூடியிருந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து-ஒருவர் பலி
HIGHLIGHTS
விருதுநகர் அருகே அப்பையநாயக்கன்பட்டியில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் மூடப்பட்டிருந்த அறையில் வைக்கப்பட்ட ரசாயன மூலப்பொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஆலையின் பாதுகாவலர் சங்கரலிங்கம் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.
தொடர்ந்து தீ எறிந்ததால் நீண்ட நேரமாக போராடி உயிரிழந்தவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் நடைபெறும் 6 வது பட்டாசு ஆலை வெடி விபத்து இதுவாகும். 6 விபத்துக்களில் 36 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.