விருதுநகரில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
ஒரு மாதத்திற்கு மேலாக மூடி உள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டத்தில் 1400 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 3 லட்சம் என 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.பட்டாசு தயாரிப்பதற்கு பேரியம் நைட்ரேட் மூலப்பொருளை சேர்க்கக் கூடாது எனவும் சரவெடி தயாரிக்க முற்றிலுமாக நீதிமன்றம் தடை விதித்துள்ளது
இதனால் பட்டாசு உற்பத்தி என்பது 20 சதவீத மட்டுமே தயாரிக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் தீபாவளி முடிந்து ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை பட்டாசு ஆலைகள் தங்கள் உற்பத்தியை தூங்கவில்லை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
இந்த வாரத்தில் மாவட்ட நிர்வாகம் ஆலை உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு தொழிற்சாலை பிரதிகளை அழைத்து பேசி பட்டாசு ஆலையை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஏஐடியுசி பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தங்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்