மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது
விருதுநகர் மாவட்டத்தில் மாணவியை கடத்தியதாக வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (22). இவர் எலக்ட்ரானிக் தொழில் செய்து வருகிறார் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடந்த 17ஆம் தேதி இருவரும் ஊரை விட்டு சென்றுள்ளனர். பின்பு மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அப்போது இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் அருகே பல்லடத்தில் இருப்பதாக சூலக்கரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் பல்லடம் சென்று அவர்களை மீட்டு வந்தனர் . மாணவியை கடத்திச் சென்றதாக ஈஸ்வரனை போக்சோ சட்டத்தில் சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.