/* */

மனைவி திட்டியதால் விரக்தி- கணவர் தற்கொலை

மனைவி திட்டியதால் விரக்தி- கணவர் தற்கொலை
X

திருச்சுழி அருகே மது அருந்துவதை கண்டித்ததால் கூலி தொழிலாளி மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குலசேகரநல்லூரைச் சேர்ந்த கூலி தொழிலாளியான முருகனுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். முருகன் அடிக்கடி மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது குடித்ததை அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த முருகன் மதுவில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதில் உயிருக்கு போராடிய முருகனை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 April 2021 4:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்