Begin typing your search above and press return to search.
எளிமையான முறையில் நடைபெற்ற திருமணங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் முன்பாக எளிமையான முறையில் நடைபெற்ற திருமணங்கள்.
HIGHLIGHTS
கொரோனோ பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்றைய தேதியில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அரசின் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள பழனியான்டவர் கோவிலில் இன்றைய தேதியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் கோவில் வாசல் முன்பாக எளிமையான முறையில் நடைபெற்றது. 50க்கும் குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர். இதேபோல் திருமண மண்டபங்களிலும் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டு திருமண நிகழ்வு நடத்தப்பட்டது.