Begin typing your search above and press return to search.
சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் எண்ணும் பணி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.44.27 லட்சம் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல்கள் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன், செயல் அலுவலர் விஸ்வநாதன், அறங்காவலர் ராஜா பெரியசாமி ஆகியோர் தலைமையில் திறக்கப்பட்டு இரண்டு நாட்களாக எண்ணப்பட்டது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ. 44 லட்சத்து 27,859 பணமும் சந்தன மகாலிங்கம் கோயிலில் ரூ. 5 லட்சத்து 34 ,760 பணமும் 21.8 கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.