/* */

ராஜபாளையத்தில் காய்கறி கடைகள் ஊருக்கு ஒதுக்குபுறம் மாற்றம்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராஜபாளையத்தில் இயங்கி வந்த காய்கறி கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறம் மாற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் காய்கறி கடைகள் ஊருக்கு ஒதுக்குபுறம் மாற்றம்
X

ஊருக்கு ஒதுக்குப்புறம் மாற்றப்பட்டுள்ள காய்கறிக் கடைகள்.

ராஜபாளையம் காந்தி சிலை அருகே இயங்கும் தனியார் சந்தையில் 50க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை காய்கறி கடைகளும், பலசரக்கு, பழம் உள்ளிட்ட ஏராளமான உணவு விற்பனை செய்யும் கடைகளும் இயங்கி வந்தது.

12 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்ற நிலையில் சந்தையில் அதிகமாக கூட்டம் கூடியது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இன்று முதல் காய்கறி கடைகள் அனைத்தும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் காந்தி சிலை அருகே செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் அனைத்தும், தற்போது மதுரை சாலையில் காவல் சோதனை சாவடி எதிரே உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள 19 காய்கறி கடைகளும் காலை 6 மணி முதல் 12 மணி வரை இயங்கும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி காய்கறிகளை வாங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 13 May 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?