/* */

விருதுநகரில் முன்னாள் படைவீரர் நலக் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

முன்னாள் படை வீரர் களுக்கான குறைதீர் கூட்டம் நாளை டிச.28 ம் தேதி நடைபெற உள்ளது

HIGHLIGHTS

விருதுநகரில் முன்னாள் படைவீரர் நலக் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு
X

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன்.

விருதுநகரில் நாளை, முன்னாள் படைவீரர் குறை தீர் கூட்டம் நாளை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர் களுக்கான குறைதீர் கூட்டம், நாளை 28ம் தேதி (வியாழன் கிழமை) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்..

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீர விருது பெற்றவர்கள், போரில் உயிர் தியாகம் செய்தவர்களை சார்ந்து இருப்பவர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணி புரிபவர்களை சார்ந்து இருப்பவர் களுக்கான குறைதீர் கூட்டம், நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த குறைதீர் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்து இருப்பவர்கள் குறைகள் எதுவும் தெரிவிக்க விரும்பினால், தங்களது கோரிக்கை மனு மற்றும் அடையாள அட்டை நகலுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்கள் கொடுத்து உரிய பயன டையலாம் என்று தகவல் தெரிவித்துள்ளார்..

Updated On: 27 Dec 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!