/* */

காரியாபட்டி பகுதிகளில் ஐந்தாயிரம் பனை விதைகள் நடும் திட்டம்

கிரீன் பவுண்டேசன் சார்பில் காரியாபட்டி ஒன்றியத்தில் 5000 ஆயிரம் பனைவிதைகள் நடும் இயக்கம் நடைபெறுகிறது

HIGHLIGHTS

காரியாபட்டி பகுதிகளில் ஐந்தாயிரம் பனை விதைகள் நடும் திட்டம்
X

 கிரீன் பவுண்டேசன் சார்பில் காரியாபட்டி ஒன்றியத்தில் நடந்த பனைவிதைகள் நடும் திட்டப்பணிகள்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் 5ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து கிராமங்களிலும் பனை விதைகள் நடும் பணியினை செய்து வருகிறது.

காரியாபட்டி ஒன்றியத்தில், கிழவனேரி, டி.செட்டிகுளம், தாமரைக்குளம், கல்குறிச்சி, தோணுகால், தண்டியனேந்தல் , பிசிண்டி அச்சங்குளம் கிராமங்களில் பனை விதைகள் நட்டு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காரியாபட்டி ஒன்றியம் டி.வேப்பங்குளம் ஊராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக இலுப்பகுளத்தில் பனைவிதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் ஆதிஈஸ்வரன் தலைமை வகித்தார். கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாயப்பு திட்டப் பணியாளர்கள் மற்றும் கிராமபுற இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து ஊருணி மற்றும், கணிமாய் கரையில் 500 க்கு மேற்பட்ட பனைவிதைகளை நட்டுவைத்தனர்.

இது குறித்து , கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் கூறுகையில் : தமிழகத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு பெரிதும் பலன் தருவதோடு, ஊருணி, மற்றும் கண்மாய் கரைகளை பாதுகாக்க கூடிய பனை மரங்களை மீண்டும் மக்கள் வளர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகத் தின் துணையோடு இந்த பனைவிதைகள் நடும் இயக்கத்தை துவக்கியுள்ளோம். முதற்கட்டமாக 5 ஆயிரம் பணை விதைகள் அனைத்து கிராமங்களிலும் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

Updated On: 29 Dec 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!