/* */

மாணவன் கேட்டவுடன் சாதி சான்றிதழ் வழங்கிய விழுப்புரம் ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாணவன் கேட்டவுடன் சாதி சான்றிதழை ஆட்சியர் மோகன் வழங்கினார்.

HIGHLIGHTS

மாணவன் கேட்டவுடன் சாதி சான்றிதழ் வழங்கிய விழுப்புரம்  ஆட்சியர் மோகன்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மாணவனுக்கு சாதி சான்றிதழ் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம் வட்டத்திற்கு உட்பட்ட கோலியனூரைச் சேர்ந்த ஐயப்பன் என்ற மாணவன் தான் கல்வி கற்க ஜாதி, வருமானம் வகுப்புச் சான்றிதழ் தேவை என்ற கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கொடுத்தான். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மோகன் மாணவனின் கல்வியை கருத்தில் கொண்டு உடனடியாக விழுப்புரம் வட்டாட்சியரை அழைத்து மாணவன் கேட்டுள்ள சான்றிதழ்களை உடனடியாக தயார் செய்ய உத்தரவிட்டார்.

அதன்படியே வட்டாட்சியர்கள் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வகுப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளை உடனடியாக தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். அவர் அந்த மாணவன் அய்யப்பனை அழைத்து அவனிடம் சான்றிதழைகளை ஒப்படைத்தார். மாணவன் ஐயப்பன் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து வீட்டுக்கு புறப்பட்டான். இது அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 July 2022 11:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது