/* */

விழுப்புரத்தில் காட்சிப்பொருளான நீச்சல் குளம்

விழுப்புரத்தில் காட்சிப்பொருளாக இருக்கும் நீச்சல் குளம் மீண்டும் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

HIGHLIGHTS

விழுப்புரத்தில் காட்சிப்பொருளான நீச்சல் குளம்
X

காட்சிப்பொருளாக காட்சியளிக்கும் நீச்சல்குளம்

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகம் அருகில் நீச்சல் குளம் உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த நீச்சல் குளம் கடந்த 27.4.2013 அன்று திறக்கப்பட்டது. இந்த நீச்சல் குளத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி பெற்றனர். இதற்காக பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட்டது மட்டுமல்லாமல், மாதந்தோறும் நீச்சல் போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வந்தது. இங்கு கட்டணமாக தனிநபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.50-ம், மாதம் ரூ.700-ம், மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இங்கு நீச்சல் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நீச்சல் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு, நீச்சல் குளம் மூடப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புநிலை திரும்பிய நிலையில், பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்காக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள், வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஆனால் இந்த நீச்சல் குளம் மட்டும் பல மாதங்களாக பயன்பாடு இல்லாமல் வெறும் காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது நீர் சுத்திகரிப்பு மோட்டார்கள் பழுதடைது, நடைபாதைகளில் சிமெண்ட் தரைத்தளங்கள் பெயர்ந்து, நீச்சல் குளத்தில் உள்ள கழிவறைகளும் பயன்பாடின்றி சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

இதனால் நீச்சல் குளம் பொலிவிழந்து காணப்படுவதோடு மாணவ- மாணவிகளின் பயிற்சியும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று நீச்சல் பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீச்சல் குளத்தின் அவல நிலையால் முறையான பயிற்சியை பெற முடியாமல் மாற்று விளையாட்டை நாடிச்செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கோடைகாலம் நெருங்கி வருவதால் குளத்தில் மீண்டும் பயிற்றி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. எனவே இந்த நீச்சல் குளத்தை விரைவில் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீச்சல் குளத்தை சீரமைக்க அதிகாரிகள், திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அரசிடமிருந்து நிதி வரப்பெற்றதும் அனைத்து சீரமைப்பு பணிகளும் முடிந்து நீச்சல் குளம் தயாராகி விடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On: 27 March 2022 7:26 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...