Begin typing your search above and press return to search.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா: மார்ச்.7 உள்ளூர் விடுமுறை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி வருகின்ற 7ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.
HIGHLIGHTS
மேல்மலையனூர் தேரோட்டத்தினை முன்னிட்டு 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகின்ற 7.03.2022 அன்று தேர் திருவிழா நடைபெறுவதால் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறை அளிக்கபட்ட தினத்திற்கு பதிலாக 19.03.2022 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.