/* */

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு

காவல்துறையினரை அவதூறாக பேசியதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு
X

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், விழுப்புரம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, வாக்கு சேகரிக்கும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது காவல்துறை குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் 294 (B) மற்றும் 504 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  9. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  10. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!