/* */

விழுப்புரம் ரயில் நிலையத்தை மேம்படுத்த கோரிக்கை

விழுப்புரம் ரயில் நிலையத்தை அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் ரயில் நிலையத்தை மேம்படுத்த கோரிக்கை
X

அனைத்து அடிப்படை வசதிகளுடன் விழுப்புரம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டுமென பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம் ரெயில் நிலையம் தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகவும், சென்னை, கோவை, திருச்சி போன்ற ரெயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக முக்கிய சந்திப்பாகவும் உள்ளது,

விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, திருப்பதி, மயிலாடுதுறை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதுடன், சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், குருவாயூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையம் வந்து செல்கின்றன.


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையம் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. மொத்தம் 117 ரெயில்கள், விழுப்புரம் வழியாக சென்று வருகின்றன. இவற்றில் திருப்பதி, புருலியா, கரக்பூர் உள்ளிட்ட 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், புதுச்சேரி, தாம்பரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை எழும்பூர், மேல்மருவத்தூர், காட்பாடி உள்ளிட்ட பயணிகள் ரெயில்கள் என 14 ரெயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்செல்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 35 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் எந்நேரமும் விழுப்புரம் ரெயில் நிலையம் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்து தான் காணப்படும்.

இதுதவிர விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு அருகிலேயே முண்டியம்பாக்கத்தில் சரக்கு ரெயில்கள் வந்து பொருட்களை ஏற்றி, இறக்கும் முனையமும் அமைந்துள்ளதால் சரக்கு ரெயில்களும் விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு அதிகளவில் ரெயில்கள் வந்து செல்வதால் சில சமயங்களில் ரெயில்களை நிறுத்த இடம் கிடைக்காமல் பல ரெயில்கள், நிலையத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பாரங்களின் எண்ணிக்கை வெறும் 6 மட்டுமே உள்ளது. கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைத்தால் இன்னும் வசதியாக இருக்கும் என பலகாலமாக விழுப்புரம் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுபோல் இருக்கின்ற 6 நடைமேடைகளிலும் போதிய அளவில் இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. அதுமட்டுமின்றி அனைத்து நடைமேடைகளிலும் முழுமையாக மேற்கூரை வசதிகளும் செய்யப்படாததால் பயணிகள் தங்கள் உடைமைகளுடன் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஆனால், இங்குள்ள ரெயில் நிலையத்திற்கு திருச்சி கோட்ட அதிகாரிகளோ, தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளோ ஆய்வுக்கு வரும்போது மட்டுமே ரெயில் நிலையம் சுகாதாரத்துடன் பளிச்சென காட்சியளிக்கிறது. ஏனைய நாட்களில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ரெயில் நிலைய சுவர்களில் சுவரொட்டிகள், விளம்பர கலாச்சாரங்களும் ஓங்குகின்றன. பயணச்சீட்டு எடுக்கும் மையத்தில் போதிய இடவசதி இல்லை.

ஒவ்வொரு நடைமேடையிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ள போதிலும் சில சமயங்களில் குடிநீர் சரிவர வருவதில்லை. பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையமும் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. அதுபோல் நடைமேடைகளில் இருக்கும் கழிவறைகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ரெயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்று பழுதடைந்து பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருக்கிறது.

அதுபோல் ரெயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மேற்கூரை வசதிகள் இல்லாததால் அங்கு நிறுத்தப்படுகிற இருசக்கர வாகனங்கள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் காய்ந்து வருகின்றன. இப்படி ஏராளமான குறைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

எனவே விழுப்புரம் ரெயில் நிலையத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த தென்னக ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 3 Oct 2022 5:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!