Begin typing your search above and press return to search.
விழுப்புரத்தில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்கு
விழுப்புரத்தில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் 1800 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
HIGHLIGHTS
விழுப்புரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி.சண்முகம் தலைமையில் ஆளும் திமுக அரசை கண்டடித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
அதில் கலந்து கொண்ட அதிமுகவினர் 1800 மீது கொரோனா விதிமுறைகளை மீறி அதிகளவில் கூட்டமாக கூடுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.