/* */

விக்கிரவாண்டி அருகே நாயக்கர் கால தூண் கடத்தல்: போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முட்டத்தூர் அருகே நாயக்கர் கால கல்தூண் கடத்தப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

விக்கிரவாண்டி அருகே நாயக்கர் கால தூண் கடத்தல்: போலீஸ் விசாரணை
X

லாரியில் கடத்தப்பட்டதாக வெளியான படம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாயக்கர் கால கல்தூண் கடத்தப்பட்டது குறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவிற்குட்பட்டது முட்டத்தூர் கிராமம். இங்கிருக்கும் பருத்திப்பட்டு எனும் மலை அடிவாரத்தில் சுமார் 33 அடி உயரமுள்ள 9 கல்தூண்கள் இருக்கின்றன. இவை செஞ்சியை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தை (கி.பி. 15-16-ம் நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும்.

இந்நிலையில் நேற்று மாலை மேற்கண்ட தூண்களில் ஒன்று திடீரென மாயமானது. லாரியில் யாரோ ரகசியமாக கடத்திச்சென்று விட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து முட்டத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா அர்ச்சுனன், கிராம நிர்வாக அலுவலர் அன்புக்கரசு, கல்யாணம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் நேற்று கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர்.

அதில், ஒரு கனரக லாரியில் பழமைவாய்ந்த கல்தூண் கடத்தப்பட்டு இருப்பதாகவும், இதனை மீட்டுத்தரும்படியும் கூறியிருந்தனர். புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட கஞ்சனூர் போலீசார், இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பழமைவாய்ந்த கல்தூண் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Aug 2022 10:27 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு