/* */

விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற பணம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே காரில் ஆவணமின்றி எடுத்து சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற பணம் பறிமுதல்
X

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர்

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சி தேர்தல்களில் பரிசு மற்றும் பணம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கபட்டு, சோதனை நடத்தி வருகின்றனர்,

இந்நிலையில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் மாதவன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆம்ஸ்டிராங் மற்றும் போலீசார் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னை நோக்கிச் சென்ற காரை சோதனை செய்தபோது, அதில், உரிய ஆவணங்களின்றி 97ஆயிரம் ரூபாய் எடுத்துச் செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம், சுந்தரிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம்,எனவும் சென்னையில் நடைபெறும் காண்ட்ராக்ட் பணிக்கு பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலையில் உதவி தேர்தல் அலுவலர் இருதயராஜிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 9 Feb 2022 3:52 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு