/* */

வானூரில் புதிய நீதிமன்ற திறப்பு விழா

விழுப்புரம் மாவட்டம், வானூரில் இன்று புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

வானூரில் புதிய நீதிமன்ற திறப்பு விழா
X

புதிய நீதிமன்ற கட்டடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்தார்.

வானுாரில் 6.88 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருச்சிறம்பலம் கூட்ரோட்டில் போதிய இடவசதியின்றி குற்றவியல் நீதிமன்றம் இயங்கி வந்தது. இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு அதிமுக., ஆட்சியின் போது, முன்னாள் அமைச்சர் சண்முகம், எம்எல்ஏ., சக்கரபாணி ஆகியோரின் முயற்சியால், புள்ளிச்சப்பள்ளத்தில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, 6. 88 கோடி ரூபாய் செலவில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்டடப்பட்டது. இதில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டப்பட்டது. இன்று 9ம் தேதி காலை 10: 30 மணியளவில் நீதிமன்ற கட்டடத்தை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்தார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 9 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...