Begin typing your search above and press return to search.
கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த வீரமுத்து. இவர் தனது பசுமாட்டை பேருந்து நிலையத்தின் பின்புறம் திருமணம் மண்டபத்தின் அருகில் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்,
மேய்ச்சலுக்கு சென்ற போது, பசுமாடு கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக, பொதுமக்கள் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது