/* */

கண்டாச்சிபுரம் அருகே பேருந்து பைக் மோதல்; ஒருவர் பலி

திருக்கோவிலூர் தொகுதி கண்டாச்சிபுரம் அருகே பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

HIGHLIGHTS

கண்டாச்சிபுரம் அருகே பேருந்து பைக் மோதல்;  ஒருவர் பலி
X

கண்டாச்சிபுரம் அருகே நடந்த வாகன விபத்து

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அய்யனார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில், மழவந்தாங்கல் கூட்ரோடு சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூரு சென்ற புதுவை அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார், அய்யனார் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த அய்யனாரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Sep 2021 6:20 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  2. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  3. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  4. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  5. வீடியோ
    🔥Ajith Billa Re-Release🔥 FDFS Celebration | Ajith Kumar | Billa |...
  6. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  8. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?