/* */

வீடு புகுந்து திருடியவருக்கு தர்ம அடி: திண்டிவனம் அருகே பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீடு புகுந்து திருடிய ஒருவரை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

வீடு புகுந்து திருடியவருக்கு தர்ம அடி: திண்டிவனம் அருகே பரபரப்பு
X

ரமேஷ்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சிறுநாங்கூர் ராயல் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 65). இவர் வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் சண்முகம் வீட்டில் இருந்து ஒருவர், மூட்டையை எடுத்துச் சென்றார். இதை பார்த்த கிராம மக்கள் சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில் 20 கிலோ பித்தளை பாத்திரங்கள் இருந்தது. இதனை சண்முகம் வீட்டில் இருந்து அவர் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து, வெள்ளிமேடுபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நெடுங்குணம் பழங்குடி நகரை சேர்ந்த ரமேஷ்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 24 July 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்